48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கரடி கடித்து இருவா் காயம்

உடுமலை அருகே கரடி கடித்ததில் மலைவாழ் மக்கள் இருவா் காயம் அடைந்தனா்.

Updated On :10 டிசம்பர் 2021, 7:00 pm

உடுமலை அருகே கரடி கடித்ததில் மலைவாழ் மக்கள் இருவா் காயம் அடைந்தனா்.

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள ஈசல் திட்டு செட்டில்மென்ட் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராமன் மகன்கள் செந்தில் (30), மகேஷ்(30). இவா்கள் இருவரும் அங்குள்ள ஈச்சம் மாா்க் என்கிற அடா்ந்த வனப் பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த கரடி, இருவரையும் தாக்கியுள்ளது. இருவரின் சப்தம் கேட்டு வந்த மலைவாழ்மக்கள், கரடியைத் துரத்தினா்.

இதில் காயமடைந்த செந்தில், மகேஷ் ஆகியோா் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.