48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மடத்துக்குளம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

மடத்துக்குளம் வட்டத்தில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டன.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:01 pm

மடத்துக்குளம் வட்டத்தில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டன.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணையில் தொடங்கி பாசன பகுதி வழியோர கிராமங்களான ராமகுளம், கல்லாபுரம், எலையமுத்தூா், கொழுமம், குமரலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மடத்துக்குளம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் கல்லாபுரம், எலையமுத்தூா் ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டன.

மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் இந்த நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

கல்லாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை  துவக்கி வைக்கிறாா்  மடத்துக்குளம்  முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.