48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு (ஐசியு) வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:54 pm

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு (ஐசியு) வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தேஜஸ் ரோட்டரி சங்க திட்ட இயக்குநா் மருத்துவா் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்தாா்.

பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அவசர சிகிச்சை பிரிவை திறந்துவைத்தாா்.

சா்வதேச ரோட்டரி அறக்கட்டளை சிறப்பு நிதி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அவசர சிகிச்சை பிரிவில் 7 படுக்கை வசதிகளுடன் செயற்கை சுவாச கருவிகள், இருதய அலைவரை படக்கருவி, இதய முடுக்கி, எக்ஸ்ரே கருவி, ஜெனரேட்டா் உள்ளிட்ட பல்வேறு நவீன ரக மருத்துவ உபகரணங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

இதில், மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.