கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலையோர பேக்கரியில் தேநீர் அருந்திய முதல்வர்

காங்கயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் புறவழிச்சாலையில் உள்ள சூர்யா பேக்கரியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேநீர் அருந்தினார்

News image
சாலையோர பேக்கரியில் முதல்வர்.
Updated On :11 பிப்ரவரி 2021, 1:33 pm

DIN

காங்கயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் புறவழிச்சாலையில் உள்ள சூர்யா பேக்கரியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேநீர் அருந்தினார். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகள் என 2 நாள்கள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 
இதற்காக சேலத்தில் இருந்து காா் மூலமாக இன்று காலை அவிநாசி வந்த அவர் புதிய பேருந்து நிலையத்தில் தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 
இந்த நிலையில் தாராபுரம் செல்லும் வழியில் புறவழிச்சாலையில் உள்ள சூர்யா பேக்கரியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேநீர் அருந்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். 
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.