ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காங்கயத்தில் மக்கள் கிராம சபை பிரச்சாரக் கூட்டம்

காங்கயம் அருகே, பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
காங்கயம் அருகே, பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோர்
Updated On :3 ஜனவரி 2021, 10:46 am

DIN

காங்கயம்: காங்கயம் அருகே, பொத்தியபாளையம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திமுக கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். காங்கயம் ஒன்றிய செயலர் பி.பி.அப்புக்குட்டி முன்னிலை வகித்தார். இதில், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்னும் தலைப்பில் உரையாற்றினர். மேலும், பொதுமக்கள் மூலமாக அதிமுகவை நிராகரிக்கிறோம் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதில், திமுக கட்சியின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குணபாலன், மாவட்ட வழக்குரைஞர் அணியின் துணை அமைப்பாளர் தங்கமணி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தனலட்சுமி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் மகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.