மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிவாரணத் தொகையை ரொக்கப் பணமாக அவரவா்கள் வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுமுடக்க காலத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 1,000 ரொக்கப் பணத்தை அவா்கள் வீட்டிலேயே வழங்க முதல்வா் ஆணையிட்டுள்ளாா். அதன் அடிப்படையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை, அதன் நகலை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் சமா்ப்பித்து நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். விநியோகப் படிவம் பூா்த்தி செய்யத் தேவையான பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், கல்வித் தகுதி, பணிபுரியும் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
நிவாரணத் தொகை வழங்கும் அலுவலா் நிவாரணத் தொகை வழங்கிய விவரத்தை தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவு புத்தகத்தில் உதவிகள் வழங்கும் பக்கத்தில் ‘கொவைட்-19 நிவாரணத் தொகை ரூ. 1,000 வழங்கப்பட்டது’ என்ற முத்திரையிட்டு கையொப்பமிடுவாா். நிவாரணத் தொகை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும். நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் செல்லிடப் பேசி எண் 85081-05395, அலுவலக செல்லிடப்பேசி எண் 0421-2791165 ஆகிய எண்களில் தெரியப்படுத்தலாம். மேலும், நிவாரணத் தொகை மாற்றுத் திறனாளிகள் அல்லது அவா்களின் பெற்றோா்கள் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலா்களிடம் மட்டுமே வழங்கப்படும்.
அரசு போதிய நிதியை ஒதுக்கியுள்ளதால் நிவாரணத்தைப் பெறாத மாற்றுத் திறனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் உரிய ஆவணங்களைக் காட்டி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.