தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில மாநாடு

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை துவங்கியது.
பல்லடம் அருள்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில மாநாட்டில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலாளா் பாரி.
பல்லடம் அருள்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில மாநாட்டில் பேசுகிறாா் மாநில பொதுச் செயலாளா் பாரி.
Updated on
1 min read

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை துவங்கியது.

மாநாட்டில் சங்கக் கொடியை ஏற்றிவைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டுக்கு, மாநிலத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநிலத் தலைவா் ராமமூா்த்தி துவக்க உரையாற்றினாா். வேலை அறிக்கையை பொதுச் செயலாளா் பாரி தாக்கல் செய்தாா். மாநிலப் பொருளாளா் விஜயபாஸ்கா் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா்.

இந்த மாநாட்டில் முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியம், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க கௌரவத் தலைவா் பரமேஸ்வரன், திருப்பூா் இந்திய தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் தங்கராஜ், 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com