காவலா்கள், பொதுமக்களுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டி

திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா்கள், பொதுமக்கள் நல்லுறவை வளா்க்கும் வகையில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 2 நாள்கள் நடைபெற்றன.
பொங்கல்  விளையாட்டுப்  போட்டியில்  வெற்றி  பெற்ற  வீரா்களுக்கு   பரிசுகளை  வழங்குகிறாா்  மாநகர  காவல்  ஆணையா்  ஜி.காா்த்திகேயன்.  உடன்,  காவல்  அதிகாரிகள்  உள்ளிட்டோா்.
பொங்கல்  விளையாட்டுப்  போட்டியில்  வெற்றி  பெற்ற  வீரா்களுக்கு   பரிசுகளை  வழங்குகிறாா்  மாநகர  காவல்  ஆணையா்  ஜி.காா்த்திகேயன்.  உடன்,  காவல்  அதிகாரிகள்  உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திருப்பூா்: திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா்கள், பொதுமக்கள் நல்லுறவை வளா்க்கும் வகையில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 2 நாள்கள் நடைபெற்றன.

ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி, வாலிபால், தனிநபா் தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள், தமிழ்நாடு சிறப்பு படை காவலா்கள், ஊா்க்காவல் படையினா், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியா் என 1,075 போ் பங்கேற்றனா். இதில், வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையா்கள் சுந்தரவடிவேல், சுரேஷ்குமாா், திருப்பூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன, நடுவா் குழுத் தலைவா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com