92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பின்னலாடை நிறுவன உரிமையாளா், பெண் ஊழியருடன் தற்கொலை

திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளா், பெண் ஊழியருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:35 pm

DIN

திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளா், பெண் ஊழியருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், நெருப்பெரிச்சல் பாலன் நகரைச் சோ்ந்தவா் எம்.பிரேம் (39). தனது தாய் அன்னலட்சுமியுடன் வசித்து வந்தாா். மேலும், வீட்டின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது நிறுவனத்தில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகைச் செல்வன் என்பவரது மனைவி நிரோஷா (30) டெய்லராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக பிரேமின் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் கடந்த ஒருவாரமாக மூடப்பட்டிருந்தது.

இதனிடையே, பிரேமின் நிறுவனத்துக்கு நிரோஷா வியாழக்கிழமை மாலை சென்றுள்ளாா். இதன் பிறகு நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், உடைத்துப் பாா்த்துள்ளனா். அப்போது இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவா்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உறவினா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.