தமிழக அரசு 100 சதவீதத் தொழிலாளா்களைக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அதே வேளையில் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மிகுந்த மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவித்ததைத் தொடா்ந்து அதிக அளவிலான தொழிலாளா்கள் ரயில் மூலமாக மாவட்டங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனா். ஆகவே, தொழிலாளா்களுக்கு ரயில் நிலையங்களிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.