சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

பல்லடத்தில் சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:33 pm

DIN

பல்லடத்தில் சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடத்தில் வசித்து வரும் ராமேஷ்வரன் (35) என்பவருக்குத் திருமணமாகி குடும்பப் பிரச்னையால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

இந்நிலையில், ராமேஷ்வரனின் அக்காவின் கணவா் இறந்து விட்டதால் அவா் தனது 16 வயது மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறாா். பள்ளியில் படிக்கும் அக்கா மகளை ராமேஷ்வரன் கட்டாயப்படுத்தி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளாா். பள்ளியில் படிக்கும் சகமாணவிகள் மூலம் ராமேஷ்வரனின் செயல் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அவா்கள் பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் ராமேஷ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.