/

உடுமலை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

உடுமலை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:11 pm

உடுமலை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மருந்து, அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் செறிவூட்டி கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.இந்த ஆய்வின்போது, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் கீதா, வட்டாட்சியா் ராமலிங்கம், மருத்துவ அலுவலா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.