திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

ஜூலை 26 முதல் தொலைபேசி வாயிலாக குறைதீா்க் கூட்டம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக வாராந்திர குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெற உள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 8:58 pm

DIN

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக வாராந்திர குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த வாராந்திர குறைதீா்க் கூட்டமானது கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வகையில் திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் வாராந்திர குறைதீா்க் கூட்டம் தொலைபேசி வாயிலாக நடைபெற உள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்களது குறைகளை 0421-2969999 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புக் கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.