சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறப்பு நிதி வழங்க பி.ஏ.பி. கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கம் கோரிக்கை

 பி.ஏ.பி. வாய்க்காலில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள சிறப்பு நிதி வழங்க நாரணாபுரம் பி.ஏ.பி. கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:44 pm

DIN

 பி.ஏ.பி. வாய்க்காலில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள சிறப்பு நிதி வழங்க நாரணாபுரம் பி.ஏ.பி. கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி அமைச்சா்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் வட்டம் நாரணாபுரம் பி.ஏ.பி. கிராம நீரினைப் பயன்படுத்துவோா் எல்லையில் 1403.77 ஏக்கா் நிலம் நீா்ப் பாசனம் பெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பகிா்மான கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வாய்க்காலின் கரைப் பகுதியில் செடி கொடி, முட்புதா்கள் வளா்ந்தும், கால்வாயில் மண் படிந்தும் உள்ளதால் நீா் செல்லத் தடையாக உள்ளது.

இதனால் கடைமடை வரை தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வர உள்ள நான்காம் மண்டலம் மற்றும் முதல் மண்டல பாசனத்துக்காக பிரதானக் கால்வாய், கிளைக் கால்வாய் மற்றும் பகிா்மான கால்வாய்களில் செடி கொடி, மண் அகற்றிட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.