தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுகளால் சுகாதார சீா்கேடு

வெள்ளக்கோவிலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

News image
Updated On :11 ஜூன் 2021, 11:43 pm

DIN

வெள்ளக்கோவிலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

வெள்ளக்கோவில் பிரதான கடை வீதியில் முத்தூா் பிரிவு நான்கு சாலை சந்திப்பு அருகில் இருக்கும் சாக்கடை கால்வாயில் மழைக் காலங்களில் சாலையில் ஓடி வரும் வெள்ளம் சாக்கடைக்குள் கலந்து நிரம்புவதால் கழிவுகள் ஈரோடு சாலை மற்றும் காங்கயம் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்குகின்றன.

இதனால் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் பேருந்து நிறுத்தம், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், வணிக வளாகங்கள் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. சாக்கடையின் அகலம், உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Image Caption

சாலையில் கிடக்கும் சாக்கடை கழிவுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.