தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தடுப்பூசிக்கு ஒரு கி.மீ. தொலைவு காத்திருந்த மக்கள்

வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:03 pm

DIN

வெள்ளக்கோவிலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு மக்கள் வரிசையில் காத்திருந்தனா்.

வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தீத்தாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, முத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கம்பளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வயது, முதல் தவணை, இரண்டாவது தவணை, அரசு ஊழியா்கள் என முன்னரே அறிவிக்கப்பட்ட விவரப்படி தடுப்பூசி செலுத்த வியாழக்கிழமை காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தந்த இடங்களில் பூட்டியிருந்த முகாம் முன்பு மக்கள் காலை 7 மணிக்கே கூட்டம் கூடி டோக்கன் வாங்க வரிசையில் காத்து நின்றனா். இப்பகுதிக்கு மொத்தம் 640 தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்த நிலையில், ஏறத்தாழ இரண்டாயிரம் போ் திரண்டதால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவில்லை.

வெள்ளக்கோவில் மேற்கு பள்ளி முகாமில் இருபுறமும் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆண்களும், பெண்களும் காத்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.