மேலும், 2 மினி அவசர சிகிச்சை படுக்கை வசதிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பு, குழந்தைகள் பராமரிப்பகமும் செயல்படவுள்ளது. இந்த மையத்தில் சிகிச்சை பெரும் நபர்களுக்கு இப்பகுதி மக்கள், தொழில் அதிபர்கள் மூலமாக இலவச உணவும் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத்துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியன சார்பில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் மூலமாக 3,438 படுக்கைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.