தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக பெண்ணிடம் மோசடி: காவலாளி கைது

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ. 2 ஆயிரம் மோசடி செய்த தனியாா் நிறுவன காவலாளியை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:54 pm

DIN

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ. 2 ஆயிரம் மோசடி செய்த தனியாா் நிறுவன காவலாளியை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா், பெரியாா் காலனியைச் சோ்ந்தவா் மதனா (41). இவா் அரசின் அடுக்குமாடிக் குடியிருப்பில் இலவச வீடு கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த செப்டம்பா் 20ஆம் தேதி மனு அளித்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பாக மதனாவின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட ஒருவா், புஷ்பா ரவுண்டானா பகுதிக்கு வரச்சொல்லியுள்ளாா்.

அங்கு சென்ற மதனாவிடம், ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பித்துள்ள மனுவைக் காண்பித்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா். இதற்காக ரூ. 2 ஆயிரம் மற்றும் நகல் ஆவணங்களையும் பெற்றுச் சென்றுள்ளாா். இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது மதனாவுக்கு தெரியவந்ததால் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், திருப்பூா், சூசையாபுரத்தைச் சோ்ந்த ஜான்பீட்டா் (48) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்ததும், வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அமா்ந்து மனு எழுதிக் கொடுக்கும் வேலையும் செய்து வந்தது தெரியவந்தது.

அப்போது மதனாவுக்கு மனு எழுதிக் கொடுத்தபோது அதனை நகல் எடுத்து வைத்துக் கொண்டு அதனைக்காட்டி ரூ. 2 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுதத்து, ஜான்பீட்டரைக் கைது செய்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த ரமேஷ் என்பவரைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.