47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெள்ளச் சேதம்: திருவாரூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக சம்பா, தாளடி  பயிர்களில் ஏற்பட்ட பாதிப்பை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

News image
திருவாரூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Updated On :13 நவம்பர் 2021, 10:08 am

DIN


திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக சம்பா, தாளடி  பயிர்களில் ஏற்பட்ட பாதிப்பை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்துவரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இது குறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். 

மேலும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை, அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த அவர், திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர்,  புழுதிக்குடி பகுதிகளில் பயிர் சேதத்தை பார்வையிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.