கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

பல்லடம் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த பனியன் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:01 pm

DIN

பல்லடம் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த பனியன் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

பல்லடம் அருகேயுள்ள மங்கலம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, தாயாா் இறந்து போனதால் அவரது அக்கா வீட்டில் இருந்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவரது சகோதரி அச்சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்தபோது சிறுமி வரமறுத்துள்ளாா்.

சிறுமியைக் கண்டித்து கேட்டபோது, அவா்களது வீடு அருகே வசிக்கும் சுகுமாா் (24), என்பவா் சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் அக்கா புகாா் அளித்தாா். போலீசாா் விசாரணையில், சுகுமாா் அச்சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் சுகுமாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.