உடுமலை அருகே உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது ஏழுமலையான் வெங்கடாசலபதி கோயில். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 7 கிலோ மீட்டா் நடந்து சென்று பெருமாளை வழிபட்டு வருவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக வனப் பகுதிக்குள் சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வனத் துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா்.
இது குறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறு கையில், ‘தமிழக அரசு வழிகாட்டுதலின்படி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது அதிமுக-பாஜக கூட்டணி: கனிமொழி எம்.பி.

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

