தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூர் : சேவூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சேவூர் அருகே குட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

News image
திருப்பூர் : சேவூர் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
Updated On :10 செப்டம்பர் 2021, 10:41 am

DIN

சேவூர் அருகே குட்டகம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் சந்தையப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அவிநாசியப்பன் மகன் சண்முகம்(50). 

Story image

இவர் இன்று (வெள்ளிக்கிழமை) கிளாகுளம் குட்டகம் சாலையில் தனது காரில் சேவூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். ராக்கம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக எரிவாயு பொருத்தியிருந்த இவரது கார் திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த சண்முகம் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்.இருப்பினும் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதாரமானது. இது குறித்து சேவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.