இந்த விழாவுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தலைமை வகிக்கிறார். இந்தக் கண்காட்சியானது வார நாள்களில் 3 மணி முதல் 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதில், சாகித்திய அகாதெமி, பாரதி, உயிர்மை, விகடன், கதிழக்கு, எதிர், என்சிபிஎச், தமிழினி, நன்றிணை, வம்சி, ஆழ்வார்கள் ஆய்வு மையம் உள்ளிட்ட 36 பதிப்பகங்கள், விற்பனை நிலையங்கள் என 94 நிறுவனங்கள் சார்பில் 95 அரங்குகளில் அமைக்கப்படவுள்ளன. இதில், கதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்படவுள்ளன.