எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

தாராபுரம் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 9:05 am

DIN

திருப்பூர்: தாராபுரம் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.

Story image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் சித்தராவுத்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்களில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 

இதனிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனைப் பறிக்க முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது: 

Story image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சித்தராவுத்தன்பாளையம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி நகரில் 57 மனைப்பிரிவுகள் கடந்த 1989 ஆம் ஆண்டு பத்திரப்பதிவுத் துறையால் சுத்தக்கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 24 மனைப்பிரிவுகளைக் கிரையம் செய்தவர்கள் வீடு கட்டியுள்ளனர். மேலும் 33 மனைப்பிரிவுகளைக் கொண்ட நாங்கள் வீடு கட்ட முயற்சிக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர்  குண்டர்களை வைத்து மிரட்டி வருகின்றனர்.

மேலும், எங்களது நிலத்தை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.