விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்னை: தொழிற்சங்கத்தினர் அரை நிர்வாணப் போராட்டம்

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை அரை நிர்வாணப் போட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்
அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்
Published on
Updated on
1 min read

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தி அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை அரை நிர்வாணப் போட்டத்தில் ஈடுபட்டனர்.

 கூலி உயர்வுப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறத்தி திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை எவ்வித தீர்வும் ஏற்படாததால் விசைத்தறியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை மாலை அரை நிர்வாணப் போட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, ஏடிபி, எம்எல்எப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com