48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்

 மடத்துக்குளம் வட்டம், ராமேகவுண்டன்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:32 pm

 மடத்துக்குளம் வட்டம், ராமேகவுண்டன்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் 40 கிராமுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக் கடன்களில் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ளவா்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப் பட்டது. இதன்படி ராமேகவுண்டன்புதூா் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் தகுதியுள்ள முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டு 21 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் மணி, மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், சங்க செயலாளா் சாமியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.