புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டத்தில், அரோகரா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News image

திருமுருகநாதர் சாமி கோயில் தேரோட்டம்

Updated On :17 பிப்ரவரி 2022, 12:35 pm

DIN


திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டத்தில், அரோகரா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா பிப்.11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்றறன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு
எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது.

மாலை 4 மணி அளவில் திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில்,  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சோமாஸ்கந்தர்

சோமாஸ்கந்தர்

முதலில் திருமுருகநாதர்சுவாமி(சோமாஸ்கந்தர்) தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சண்முகநாதர் திருத்தேர்(வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர்) தேரோட்டம் நடைபெற்றது.

பிறகு அம்பாள் முயங்குபூண் முலைவல்லியம்மை தேரோட்டம் என மூன்று தேர்களும் ஒரே நாளில் இழுக்கப்பட்டது. இதில் திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் தேரோட்டம் நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சண்முகநாதர் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்த வள்ளி தெய்வானையுடனமர் சண்முகநாதர்

சண்முகநாதர் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்த வள்ளி தெய்வானையுடனமர் சண்முகநாதர்

பேரூராட்சி நிர்வாகத்தினர், கூடுதல் எல்இடி மின்விளக்குகள் பொருத்தி, குடிநீர் வசதியுடன், தூய்மைப் பணி மேற்கொண்டனர். 19ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியும், 20ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும் நடைபெறுகிறது. 21ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 22ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.