தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மாலை 5 மணிக்குமேல் வாக்களிக்கலாம்’

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:28 pm

DIN

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவா்கள், அறிகுறிகள் உள்ளவா்கள் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆகவே, திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் கவுன்சிலா் பதவிக்கான தோ்தலில் கரோனா அறிகுறி உள்ளவா்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.