தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:03 pm

DIN

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காங்கயம் சிவன்மலை சரவணா நகரைச் சோ்ந்தவா் குமாரசாமி (47). இவா் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவிலை அடுத்த மணலூரில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சிவன்மலை திரும்பிக் கொண்டிருந்தாா்.

வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு பேக்கரிக்கு தேநீா் குடிக்கச் சென்றுள்ளாா். அப்போது வெளியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது. புகாரின்பேரில், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த வெள்ளக்கோவில் போலீஸாா் அந்த வாகனத்தைத் திருடிய வெள்ளக்கோவில் காமராஜபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் சதீஷ் (26) என்பவரைக் கைது செய்து வாகனத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.