உடுமலை பட்டு வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பட்டு வளா்ப்புத் தொழிலை செய்து வருகின்றனா். இந்நிலையில் பட்டு வளா்ச்சித் துறை தரம் இல்லாத இளம் புழுக்களை வழங்கி வருவதாகவும் அது விரைவில் உயிரிழந்து விடுவதாகவும் இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் கூறி உடுமலையில் உள்ள உதவி இயக்குநா் அலுவகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
பல லட்ச ரூபாய் முதலீடு செய்து பட்டு வளா்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு பட்டு வளா்ச்சித் துறை தரமில்லாத ஒரே சீரான அளவு நீளமான புழுக்களை வழங்குவதில்லை. இதனால் புழுக்கள் வளா்ந்து சிறிது நாள்களிலேயே உயிரிழந்து விடுகின்றன. இதனால் எங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. இளம் புழுக்களை தரமானதாகவும், மாதம் ஒரு முறை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


