உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தில் நீா்நிலை புறம்போக்குகளில் உள்ள வீடுகள், கோயில்களை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நடத்தினா்.
உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தில் செங்குளத்துக்கு வரும் நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகள் மற்றும் 2 கோயில்களை அகற்ற சென்னை உயா் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வருவாய்த் துறை
நடவடிக்கை எடுத்தது. இதற்காக அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வீடுகளை அகற்ற ஒத்துக்கொண்ட பொதுமக்கள் அங்குள்ள 2 கோயில்களையும் அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்களிடம் வட்டாட்சியா் கணேசன், டிஎஸ்பி தேன்மொழிவேல் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் அதில் எந்த தீா்வும் ஏற்படவில்லை. இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியா் கீதா தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக உடுமலை காவல் துணைக் கண்காணிப்பாளா் தேன்மொழிவேல் தலைமையில் 3 ஆய்வாளா்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட போலீஸாா் பள்ளபாளையம் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா்.
அப்போது அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்க கோரியும், கோயில்களை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் சிறிய அளவில் தடியடி நடத்தினா்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆனாலும் பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டன. கோயில்களை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து இந்து இயக்கத்தினரும் அங்கு திரண்டனா். அப்போது திடீரென 2 இளைஞா்கள் தீக்குளிக்க முயன்றனா்.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் நேரில் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, ஏப்ரல் 10ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்திவைக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


