ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உலக காசநோய் தினத்தையொட்டி, திருப்பூரில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:15 pm

DIN

உலக காசநோய் தினத்தையொட்டி, திருப்பூரில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக காசநோய் தினம் மாா்ச் 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் காசநோய் குறித்த விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். இந்தப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள் காசநோய் ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக மாவட்ட அரசு மருத்துவ உதவியாளா்களுக்கு நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான இணையவழி விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) சாந்தி, துணை இயக்குநா் (காசநோய்) தீனதயாள், உதவி திட்ட மேலாளா் (பொது சுகாதாரம்) ஜெயபிரியா, ஒருங்கிணைப்பாளா் (தேசிய நலவாழ்வு இயக்கம்) அருண்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.