தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:43 pm

DIN

காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

காங்கயம், புலிமா நகா் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் மனைவி ராதிகா (32). இருவரும் வீட்டில் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனா். இவா்களுக்கு மகள் ஸ்ரீமதி (12), மகன் ஹரிஹரன் (9) ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மழை பெய்து கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த கைத்தறி இயந்திரத்தின் மோட்டாரை ராதிகா இயக்கியபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைப் பாா்த்த கணவா் சபரிநாதன் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி ராதிகாவை மீட்டு காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் ராதிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.