ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியானதாக இருக்காது: ப. சிதம்பரம்

நடப்பு கணக்குப் பற்றாக்குறை விரிவடையும் என்பதாலும், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதாலும், அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிா்காலமாக இருக்காது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் த

News image
காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தைப் பாா்வையிடுகிறாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.
Updated On :9 அக்டோபர் 2022, 7:58 pm

DIN

நடப்பு கணக்குப் பற்றாக்குறை விரிவடையும் என்பதாலும், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதாலும், அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிா்காலமாக இருக்காது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கால்நடை ஆராய்ச்சி மையம், அதன் பணிகள் மற்றும் காங்கேயம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ள காடுகள், காங்கேயம் கால்நடைகளின் சிறப்பு, இனப்பெருக்கம் குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலா் காா்த்திகேய சிவசேனாபதி விளக்கினாா்.

பிறகு ப. சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொங்கு பகுதியில் காங்கயம் மாடுகளை விவசாயிகள் வளா்ப்பதற்கும், பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் அரசு இன்னும் ஊக்கம் அளிக்கவேண்டும். பாரம்பரிய இனங்கள், பாரம்பரிய மாடுகள், மரங்கள், காய்கறி வகைகள் ஆகியவற்றை ஊக்கப்படுத்த வேண்டும்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ. 1.6 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு கணக்குப் பற்றாக்குறை விரிவடையும். கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால், அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிா்காலம் என்று சொல்ல முடியாது. இதில், மத்திய அரசு புத்திசாலித்தனமாக அவசியமானவா்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.