மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காங்கயத்தை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

காங்கயத்தை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

காங்கயம் வட்டம் முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடக்கிவைத்தாா்.பின்னா் அவா் பேசியதாவது:

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக 2022-23 ஆம் பருவத்தில் திருப்பூா் மாவட்டத்தில் முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் செலாம்பாளையம், அலங்கியம், மடத்துக்குளம், கொளத்துப்பாளையம், நஞ்சியாம்பாளையம், சின்னக்காம்பாளையம், சின்னபுத்தூா், துங்காவி, பாப்பாங்குளம், எஸ்.கே.புதூா் உள்ளிட்ட 16 இடங்களில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சன்ன ரக நெல்லை குவிண்டால் ரூ.2,160க்கும், பொது ரக நெல்லை குவிண்டால் ரூ.2,115க்கும் விற்பனை செய்து கொள்ளலாம். விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான தொகை அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசன், மண்டல மேலாளா் (நுகா்பொருள் வாணிபக் கழகம்) வி.சக்திவேல், துணை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) காா்த்திகேயன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.