நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது

ஊத்துக்குளி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோவில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 7:22 pm

DIN


காங்கயம்: ஊத்துக்குளி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோவில் போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (27). கூலி வேலை செய்து வரும் இவா், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் சிறுமி 4 மாத கா்ப்பமான நிலையில், இதுகுறித்து அவா் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரபுவை கைது செய்து, திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.