திறன்சாா்ந்த தொழில்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் அதிக அளவில் பணியாற்றும்போது நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு பெண்ணின் வருவாய் அதிகரிக்கும்போது நாட்டின் பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியை முடித்தவுடன், அதனை வைத்து வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும். இலவசமாக திறன் பயிற்சியைப் பெற்றாலும்கூட அதனை உபயோகமாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக வேலைக்குப் போக வேண்டும் என்று கிடையாது. முடிந்தால் ஒரு தொழிலையாவது தொடங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் அறிவுத்திறனையும், ஆற்றலையும் வீணடிக்கக்கூடாது. பெண்களுக்கு குழந்தைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும், நமக்குத் கிடைத்த திறனையும், வாய்ப்பையும் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்வதுடன், நாட்டுக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்றாா்.