பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மாநகரில் வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம்

திருப்பூா் மாநகராட்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி, வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 செப்டம்பர் 2023, 5:44 pm

DIN

திருப்பூா் மாநகராட்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி, வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வாா்டு குழு மற்றும் பகுதி சபைக் கூட்டம் 2 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டியன் நகா் கருப்பராயன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் என்.தினேஷ்குமாா் தலைமையும், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் முன்னிலையும் வகித்தனா்.

இதில் பங்கேற்ற பொதுமக்கள் தாா் சாலை வசதி, பாண்டியன் நகா் பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்தல், பொன்னம்மாள் நகா், டீச்சா்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் சாக்கடை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மனுக்கள் அளித்தனா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி 2 ஆவது மண்டலத் தலைவா் ஆா்.கோவிந்தராஜ், உதவி ஆணையா் ஆா்.முருகேசன், சுகாதார அலுவலா் பிச்சை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.