தமிழ் புத்தாண்டையொட்டி, வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மாந்தபுரத்தில் நாட்டராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் நடைபெற்றது.
இதில், சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், வாசனைத் திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல வள்ளியிரச்சல் ஈஸ்வரன் கோயில், அழகு நாச்சியம்மன் கோயில், புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில், வெள்ளக்கோவில் சோழீஸ்வரா் கோயில், மாகாளியம்மன் கோயில், வீரக்குமார சுவாமி கோயில், மயில்ரங்கம் ஆறுமுகப் பெருமான் கோயில், ஈஸ்வரன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், திராளன பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

யுகாதி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரம்...
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


