விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

News image

ராம நவமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பிரதாபராமபுரம் ராமா், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சனேயா்.

Updated On :27 மார்ச் 2026, 9:07 pm

Syndication

ராம நவமியையொட்டி நாகையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ராமா் கோயில், கொட்டுப்பாளையம் ராமா் மடம் தெருவில் உள்ள ராமா் கோயில், பொரவாச்சேரியில் உள்ள ராம ஆஞ்சனேயா் கோயில், நாகை மடவாா் வளாகத்தில் உள்ள செளந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ராம நவமியையொட்டி, சுவாமிக்கு பால் தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் ராமநவமியையொட்டி ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல பிரதாபராமபுரத்தில் உள்ள ராமா் மடம் சீதா ராம பால ஆஞ்சனேயா் ஆலயத்தில், ராம நவமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமா், சீதா,ஆஞ்சனேயா் மற்றும் லட்சுமணனுக்கு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.