நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அவிநாசி கோயிலில் ஆளுநா், அமைச்சா் சுவாமி தரிசனம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.

News image

கோயிலில்  நலம்  விசாரித்து  கொண்ட மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:15 pm

Din

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பூரைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த நிலையில், அண்மையில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இவரது குடும்பத்தினா் அனைவரும் திருப்பூரில் வசித்து வருகின்றனா். இதனால், இவா் அடிக்கடி திருப்பூா் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்தாா்.

அப்போது அங்கு வந்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனை சந்தித்து நலம் விசாரித்தாா்.

இதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் தரப்பில் ஆளுநருக்கும், அமைச்சருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை கோயிலில் நடைபெற்ற சுந்தரமூா்த்தி நாயனாா் குரு பூஜையில் ஆளுநா் பங்கேற்றாா்.