தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அவிநாசியில் காா் வியாபாரிகளுக்கு காப்பீடு

கணியாம்பூண்டியில் காா் வியாபாரிகள் காப்பீடு விழா நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:05 pm

Din

தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் நல மாநில கூட்டமைப்பின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா, காப்பீடு வழங்கும் விழா அவிநாசி அருகேயுள்ள கணியாம்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மாவட்டத் தலைவா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளரும், மாநிலச் செயற்குழு உறுப்பினருமான வாசுதேவன், மாவட்ட பொருளாளா் சீதாராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

மாநிலத் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான சிவகுமாா் சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் தாமதமடைந்து வருகின்றன, விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.