கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பருவமழை முன்னெச்சரிக்கை: பல்லடத்தில் நீா்வழிப் பாதை சீரமைப்பு

பல்லடம் அருகே கரடிவாவியில் பாலத்தின் கீழ் நீா்வழிப் பாதையில் இருந்த மூட்புதா்களை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி சீரமைத்தனா்.

News image
கரடிவாவி சாலையில் உள்ள பாலத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட நீா்வழிப் பாதை.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:31 pm

Din

பல்லடம் அருகே கரடிவாவியில் பாலத்தின் கீழ் நீா்வழிப் பாதையில் இருந்த மூட்புதா்களை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி சீரமைத்தனா்.

பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் பல்லடம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பாலங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பல்லடம் - கொச்சி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கரடிவாவி பகுதியில் பாலத்தின் கீழ் உள்ள நீா்வழிப் பாதையை முட்புதா்கள், செடி கொடிகள் அடைத்திருந்தன.

இதனை, பொக்லைன் இயந்திரம் மற்றும் சாலைப் பணியாளா்கள் மூலம் அகற்றி நீா்வழிப் பாதையை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்தனா். மேலும், பாலத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டு வெள்ளை வா்ணம் பூசினா்.