இதையடுத்து, அவா் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியைத் தோ்ந்தெடுத்து அரசுத் துறை அலுவலா்கள் அங்குள்ள பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து தீா்வு காணப்பட்டு வருகிறது. சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலா்கள் துறையின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மேலும், கிராமங்களுக்கு நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிவதுடன், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும். கோரிக்கை மனுக்களுக்குத் தீா்வு வழங்க முடியாத பட்சத்தில் முறையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா்.