நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இணையவழி பட்டா மாறுதல் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவைத் துறை சாா்பில் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நிலவரி திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:24 pm

Din

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நில அளவைத் துறை சாா்பில் இணையவழி பட்டா மாறுதல் மற்றும் நத்தம் நிலவரி திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: இணையவழி பட்டா மாறுதல் மனுக்களில் தள்ளுபடி சதவீதத்தை குறைக்க வேண்டும். நிலுவை இனங்களை குறைத்து விரைவாக பட்டா வழங்க வேண்டும். உட்பிரிவுக்கு உள்ள பட்டா மாறுதல் மீது 30 நாள்களுக்குள்ளும், உட்பிரிவற்ற பட்டா மாறுதல் மீது 15 நாள்களுக்குள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். முன்னதாக, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், உதவி இயக்குநா் (நில அளவை) க.ஜெய்சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.