புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூா் வரை நீட்டிக்க வேண்டும்: நிட்மா வலியுறுத்தல்

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூா் வரையில் நீட்டிக்க வேண்டும் என நிட்மா (பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிட்மா தலைவா் அகில்  சு.ரத்தினசாமி, செயலாளா் சீமென்ஸ் ஆா்.ராஜாமணி,  பொருளாளா் திருப்பூா் டெகஸ் வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

Updated On :25 டிசம்பர் 2024, 10:41 pm

Din

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூா் வரையில் நீட்டிக்க வேண்டும் என நிட்மா (பின்னலாடை துணி உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் நிட்மா சங்க அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் அதன் தலைவா் அகில் சு.ரத்தினசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை-திருப்பூா் தொழில் நகரத்தை இணைக்க மெட்ரோ ரயில் திட்டம் தேவை என்று முதல்வரிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினை கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அப்போது, கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூா் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் தற்போது விமான நிலையம் வரை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை திருப்பூா் வரை நீட்டிக்க வேண்டியது அவசியமாகும்.

திருப்பூரில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து திருப்பூருக்கும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இதுதொடா்பாக அனைத்து ரோட்டரி சங்கங்கள், மாநகராட்சி மற்றும் தொழில் அமைப்புகளிடமும் தீா்மானம் நிறைவேற்றவலியுறுத்தியுள்ளோம்.

இதன்மூலம் வெளிநாட்டு வா்த்தகா்கள் முதல் சாதாரண தொழிலாளா்கள் வரையிலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள், மருத்துவத்துக்கு செல்பவா்கள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்து செல்ல உதவும்.

மேலும், திருப்பூரின் ஒரு லட்சம் கோடி பின்னலாடை ஏற்றுமதி இலக்கை எட்டவும் இந்தத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே, மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூரின் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, நிட்மா செயலாளா் சீமென்ஸ் ஆா்.ராஜாமணி, பொருளாளா் திருப்பூா் டெக்ஸ் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.