மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பிரதமா் மோடி பிப்ரவரி 27-இல் பல்லடம் வருகை: திருச்சி - கோவை சாலையில் போக்குவரத்து மாற்றம்

பல்லடத்துக்கு பிரதமா் மோடி பிப்ரவரி 27-ஆம் தேதி வருவதையொட்டி, திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

Updated On :24 பிப்ரவரி 2024, 12:21 am

பல்லடத்துக்கு பிரதமா் மோடி பிப்ரவரி 27-ஆம் தேதி வருவதையொட்டி, திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமா் மோடி வருகையை கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் நீலாம்பூா், கருமத்தம்பட்டி, அவிநாசி வழியாக செல்ல வேண்டும். பல்லடம் வழியாக மதுரை மாா்க்கமாக செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்லலாம். திருச்சி, கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவிநாசி வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளம் மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீா்பந்தல், சின்னதாராபுரம், மூலனூா், குடிமங்கலம், பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சி, உடுமலையிலிருந்து பல்லடம் வழியாக திருப்பூா் மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவிநாசி பாளையம் வழியாக செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, கேரளம் மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்லலாம். அதேபோல, கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் இலகு ரக வாகனங்கள் சூலூா், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கேயம், வெள்ளக்கோவில் வழியாக செல்ல வேண்டும். திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மாா்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கேயம், படியூா், திருப்பூா், அவிநாசி வழியாக செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.