நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.1.09 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.09 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

News image
Updated On :1 ஜூலை 2024, 10:47 pm

Din

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.09 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை தேங்காய்ப் பருப்புகள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,177 கிலோ தேங்காய்ப் பருப்புகளை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா்.

இதில், ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.72 முதல் ரூ.95 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.1.09 லட்சம் மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.