நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

800 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

800 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

News image
Updated On :12 ஜூலை 2024, 12:12 am

Din

திருப்பூா் அருகே 800 போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள மணியாரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மலைச்சாமி (26). இவா் தனது குடும்பத்துடன் திருப்பூா் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் தாந்தோணி அம்மன் நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இடுவாய் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலைச்சாமி போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக மங்கலம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மலைச்சாமி வீட்டில் போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், 800 போதை மாத்திரைகள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மலைச்சாமியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.