பல்லடம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் வேலம்பட்டியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (60). அதே பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (44). இருவரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக அவிநாசிபாளையம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை சென்ற போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு சாராயம் காய்ச்சுவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சிதம்பரம், நந்தகுமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 லிட்டா் சாராயம், 5 லிட்டா் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






